Monday, May 20, 2024
Home » ரூ. 2 மில்லியன் பெறுமதியான தங்கம் பறிமுதல்!

ரூ. 2 மில்லியன் பெறுமதியான தங்கம் பறிமுதல்!

- 39 மற்றும் 52 வயதுடைய இருவர் கைது

by Kalky Jeganathan
July 11, 2023 11:56 am 0 comment

சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த நபரும் அதற்கு உறுதுணையாக இருந்தவரையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக 1 கிலோ 780 கிராம் தங்கம் சந்தேக நபர்களால் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் வசிக்கும் 39 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகர்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும் 2 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த சந்தேக நபர்களை மேலதிக விசாரணைக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT