சட்டவிரோதமான முறையில் தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த நபரும் அதற்கு உறுதுணையாக இருந்தவரையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறிப்பாக 1 கிலோ 780 கிராம் தங்கம் சந்தேக நபர்களால் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் வசிக்கும் 39 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகர்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும் 2 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த சந்தேக நபர்களை மேலதிக விசாரணைக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.