Sunday, May 12, 2024
Home » புதிய விமானப்படைத் தளபதி உதேனி ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய விமானப்படைத் தளபதி உதேனி ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்தித்தார்

- பதவியேற்ற பின் சம்பிரதாயபூர்வ சந்திப்பு

by Rizwan Segu Mohideen
July 6, 2023 1:29 pm 0 comment

புதிய விமானப்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்தித்தார்.

நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவர் சந்தித்தார்.

இலங்கையின் 19ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அண்மையில் நியமிக்கப்பட்டார்.

பதவியேற்ற பின்னர், புதிய விமானப்படைத் தளபதி சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்ததுடன் நினைவுப் பரிசையும் கையளித்தார்.

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT