யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட இளம் தமிழ் பெண் வைத்தியர் ஒருவர், நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை ஒன்றுக்கு வெளியே காரில் வைத்து இப்பெண் வைத்தியர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட பொலிஸார் ஒஸ்லோவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கைத்துப்பாக்கி ஒன்றும் காரின் உள்ளேயிருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இளைஞர் ஒருவர், இவ்விளம் வைத்தியரைச் சுட்டுக் கொன்று விட்டு, தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளரென்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் மூன்றாவது நபர் எவராவது இதில் சம்பத்தப்பட்டுள்ளனரா ?என்பதை அறிவதற்காகப் பொலிஸார் சாட்சிகளிடம் தகவல்களைக் கோரியுள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட யுவதி முப்பது வயதான ராகவி வரதராஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பல் மருத்துவர். உயிரிழந்த ஆணின் விவரங்கள் தெரியவில்லை. அத்துடன், உயிரிழந்தப் பெண் பலமுறை உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.