220
ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்த முயன்ற ஐந்து தாக்குதல்தாரிகளும் கொல்லப்பட்டு அவர்களின் ஆளில்லா விமானங்களும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி தொக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க துருப்புகளை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு போராளிகள் குறைந்தது 76 தடவைகள் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஈராக், கிர்குக்கிற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமையே தாக்குதல்தாரிகள் மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.