Monday, May 20, 2024
Home » கிளிநொச்சி கண்ணகைபுர கிராம மக்களின் பிரச்சினைக்கு தீர்வு

கிளிநொச்சி கண்ணகைபுர கிராம மக்களின் பிரச்சினைக்கு தீர்வு

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்

by Gayan Abeykoon
May 10, 2024 9:28 am 0 comment

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கிலான மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற கண்ணகைபுரம் கிராமத்தின் அடிப்படை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

ஜனாதிபதியின் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாடளாவியரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் ஒர் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் திட்டத்தில் கிளிநொச்சியில் கண்ணகைபுரம் கிராமம் தெரிவாகியுள்ளது. அதற்கமைய கண்ணகைபுரம் கிராம அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT