104
சாவகச்சேரி கமநலசேவை நிலையத்துக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் தெற்கு கமக்கார அமைப்பினருக்கான கால போக பதிவுகள், ஏக்கர் வரி மற்றும் சந்தாபணம் அறவிடும் செயற்பாடுகள் இன்று (8) இடம்பெறவுள்ளதாக கமக்கார அமைப்பின் செயலாளர் இ.தெய்வேந்திரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை எழுதுமட்டுவாள் பொதுச்சந்தையில் மேற்படி பதிவுகள் இடம்பெறவிருப்பதால் கமக்கார அமைப்புக்குட்பட்ட நெற் செய்கையாளர்கள் உரிய நேரத்தில் வருகை தந்து பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். வருகை தரும்போது வயல்களை ஒளிப்படம் எடுத்து கமநலசேவை நிலையத்தில் ஒப்படைத்தமைக்கான குறியீட்டு இலக்கத்தையும் சமர்ப்பிக்க வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(சாவகச்சேரி விசேட நிருபர்)