பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி, தேர்தல்களில் முறைகேடுகள் பரவலாக நடப்பதாகக் கூறி நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகிறது.
லாகூர் உட்பட நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் பொலிஸார் சோதனை நடத்தி வருவதாக கட்சிச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள், சமீபத்திய இடைத்தேர்தலில் மோசடிகள் நடந்ததாகக் கூறப்படுவதற்கு எதிராக திட்டமிடப்பட்ட எதிர்ப்புப் பேரணிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.
ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடந்ததாகவும், பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள்ஆணை திருடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி நாடு தழுவிய போராட்டங்களை கட்சி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) தலைவர் பாரிஸ்டர் கோஹர் அலி கான், பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை (ECP) விமர்சித்தார், 21 தேசிய மற்றும் மாகாணங்களுக்கான இடைத்தேர்தலை வெளிப்படையாக நடத்தத் தவறியதாக குற்றம் சாட்டினார்.
குஜராத்தின் பிபி-32 தொகுதியில் உள்ள கட்டாலா வாக்குச் சாவடிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கோஹர், இடைத்தேர்தலை ஒரு கேலிக்கூத்தாக அழைத்தார். தேர்தல் முறைகேடுகளால் பதவிக்கு வந்தவர்களைக் காட்டிலும், மக்கள் ஆதரவுடன் உண்மையான மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிபி-32 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை PTI நிராகரிப்பதாக கோஹர் தெரிவித்தார்.