இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 84ஆவது மேதின விழா இன்று (01) கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தில் காலை10 மணிக்கு நடைபெறவுள்ளதென, கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள தாவது,
மேதினத்தை நாம் இம்முறை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கிறோம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை, அன்றாட, அத்தியாவசியத் தேவைகள், உரிமைகள், வேலைநேர நிர்ணயம், இன்ன பிற உரிமைகள் ஆகியவற்றை வென்றெடுக்க இந்த வெற்றித் தினத்தை தொழிலாளர் வர்க்க சிந்தனையோடு பங்கெடுப்போம்.
83 மேதினங்களை கொண்டாடிய பெருமை இ.தொ.காவுக்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் உண்டு. இந்தவகையில் இந்தமேதினம் சிறப்பாக அமையவும்,சகல எமது அங்கத்தவர்களின் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.
மேதின விழாவில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நிதிச்செயலாளரும், தோட்ட உட்கட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட இ.தொ.கா பிரதித் தலைவர்கள், சகல உபதலைவர்கள், நலன் விரும்பிகள், ஆதரவாளர்கள், தோட்டத் தலைவர், தலைவிகள், இளைஞர், யுவதிகள் அணியினர், அங்கத்தவர்கள் எமது இ.தொ.கா உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பெருமளவில் இதில் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இதேவேளைஇதில் சிறப்பம்சமாக உள்நாட்டு, வெளிநாட்டுஊடகவியலாளர்களும் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றையதினம் இ.தொ.காவின் மாபெரும் பேரணி கொட்டகலை நகரில் இருந்து மலையககலை, கலாசார நிகழ்வுகளுடனும், ஊர்திகளுடனும்; பிரதானமேடையை நோக்கி வந்தடையவுள்ளனர். இதற்கானசகலஏற்பாடுகளையும் இ.தொ.காவின் மே தின ஏற்பாட்டுக்குழு ஒழுங்கு செய்துள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.