லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் பதுளை வெலிமடை வால்டிமார் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டன.
பதுளை மாவட்டத்தில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்ளும் பாடசாலைகளில் ஒன்றாக வெலிமடை வால்டிமார் தமிழ் வித்தியாலயம் விளங்குகின்றது. இதனால் அவர்களின் தேவைகளை கண்டறிந்து லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்துவருகின்றது.
இந்நிகழ்வில் வால்டிமார் தமிழ் வித்தியாலயத்தின் 125 மாணவர்களுக்கு அத்தியாவசியமான பாடசாலைப் பைகள் மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. நேரடி பயனாளிகள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிபர், வலயக்கல்வி அலுவலக ஊழியர்கள் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை குழுவின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(லுணுகல நிருபர் )