Home » யாழில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் பகிர்ந்தளிப்பு

யாழில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் பகிர்ந்தளிப்பு

by Gayan Abeykoon
May 1, 2024 5:03 am 0 comment

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 7 ஆயிரம் அரச காணித்துண்டுகள், காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் 05 வீதத்திற்கும் உட்பட்டதாகவே அரச காணிகள் காணப்படுகின்றன. சாவகச்சேரி, மருதங்கேணி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அரச காணிகள் உள்ளன.

யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் விஸ்தீரணம் கொண்டதாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை வழங்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முதலீட்டுக்கு ஏற்ற காணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இனம் கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT