189
நீதிபதிகளின் முடிவுகள் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கும் கூற்று சிறப்புரிமை மீறல் என்றும் அது
தொடர்பில் தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். தமக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில் இரண்டு நீதிபதிகள் அதற்கான தீர்ப்பை எழுதியிருப்பதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கின்றார் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், இது பாரிய சிறப்புரிமை மீறல் என்றும் அத்துடன் சட்டத்துறையில் தலையீடு செய்யப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம்