128
உடப்பு கிரிக்கெட் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆண்டிமுனை வளர்மதி விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
ஆண்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற இறுதிப் போட்டியில் செல்வபுரம் நாகதம்பிரான் அணியை வளர்மதி அணி வீழ்த்தியது. இந்த சுற்றுப்போட்டியில் 11 அணிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க.
உடப்பு குறூப் நிருபர்