Home » இ.தொ.கா. ஏற்பாட்டில் நாளை கொழும்பில் மாபெரும் அறவழி போராட்டம்!

இ.தொ.கா. ஏற்பாட்டில் நாளை கொழும்பில் மாபெரும் அறவழி போராட்டம்!

by Rizwan Segu Mohideen
April 18, 2024 11:41 am 0 comment

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழி போராட்டமொன்று நாளை (19) நடைபெற உள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நாளை காலை 10.00 மணி முதல் இந்த அறவழி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரு வருடத்திற்கு மேலாக தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்காது அலட்சிய போக்கை கடைப்பிடிக்கும் கம்பனிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும், தோட்டத் தொழிலாளர்களின் ரூ. 1700 சம்பளத்தை வழங்க மறுத்த முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இந்த அறவழி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT