Friday, May 17, 2024
Home » ‘உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்கட்டும்’

‘உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்கட்டும்’

எம். எஸ். தௌபீக் எம்.பி

by Gayan Abeykoon
April 11, 2024 5:36 am 0 comment

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை  தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். தௌபீக் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

புனித ரமழான் நோன்பை நோற்று நல்லமல்களில் விழித்திருந்து வணங்கி இன்று பெருநாளை அடைந்திருக்கிறோம்.

இறை அச்சத்தோடு இவ்வருட நோன்பை எதிர்கொண்டு, நமது ஈமானை இந்த மாதத்தில் பலப்படுத்திக் கொண்டோம்.

பலப்படுத்திக் கொண்ட உள்ளங்களை இன்றைய தினத்தோடு விட்டுவிடாது வாழ்நாள் பூராகவும் செயற்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதோடு, ஏழை எளியோருக்கு இயன்ற உதவிகளைச்  செய்வோம்.

அதேபோன்று பலஸ்தீனத்தில்  நிரந்தர அமைதி நிலவ இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.

உலகெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்கட்டும் என பிரார்த்தித்தவனாக உலக வாழ் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT