மூதூர் கிழக்கு – கட்டைப்பறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (09) மாலை ஆரம்பித்து வைத்தார்.
முதல் நிகழ்வாக பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநரின் சேவையினைப் பாராட்டி ஏற்பாட்டுக் குழுவினரால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக மூதூர் பிரதேச செயலாளர், உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கட்டைப்பறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டு கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மரதன் ஓட்டம், படகோட்டம், வழுக்கு மரம் ஏறுதல், கயிறிழுத்தல், சைக்கிளோட்டம், சங்கீதக் கதிரை, முட்டியுடைத்தல், பலூனுடைத்தல், மிட்டாய் உண்ணுதல், நீச்சல் உள்ளிட்ட பல விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
(தம்பலகாமம் குறூப் நிருபர்)