Friday, May 31, 2024
Home » நாவல மஸ்ஜித் பத்ரிய்யீனினால் காஸா மக்களுக்கு நன்கொடை

நாவல மஸ்ஜித் பத்ரிய்யீனினால் காஸா மக்களுக்கு நன்கொடை

பள்ளி நிர்வாக சபை அமைச்சர் விதுரவிடம் அன்பளிப்பு

by mahesh
April 10, 2024 1:10 pm 0 comment

இராஜகிரிய, நாவல அல் மஸ்ஜிதுல் பத்ரிய்யீன் ஜும்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபையினர் காஸாவில் உள்ள சிறுவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடை வழங்கினர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம், பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் காசோலையை கையளித்தனர்.

இராஜகிரிய அல் மஸ்ஜிதுல் பத்ரிய்யீன், நாவல ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான அபு ஹனீபா, இப்னு ஷுஐப் மற்றும் மொஹிதீன் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாவல ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத் உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நன்கொடையிலிருந்து இது வழங்கப்பட்டதாக மொஹிதீன் காதர் தெரிவித்தார்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT