லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கணவர் விஜயகாந்த் மறைவை நினைவுபடுத்தி தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா தலையில் அடித்துக் கொண்டே கண்ணீர் விட்டு கதறி அழுதது அக்கட்சியினரை உருக வைத்தது.
பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை தீவிரமாக ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடலூரில் நேற்றுமுன்தினம் பிரசாரம் செய்த பிரேமலதா கண்ணீரும் கம்பலையுமாக பேசியது தே.மு.தி.கவினரை உருக வைத்தது.
கடலூர் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
“கேப்டன் விஜயகாந்துடன் நான் திருமணம் செய்து முதலில் வந்த ஊர் பண்ருட்டிதான். ஆனால் என் துரதிருஷ்டம், நான் இன்னைக்கு கேப்டன் இல்லாமல் வந்திருக்கிறேனே. இன்னைக்கு கேப்டன் இல்லாம முதல் முறையாக உங்க கிட்ட வந்துருக்கேனே. ஏன் கடவுள் இப்படி செஞ்சாரோ? யாருக்கும் எந்த தண்டனையும் நாங்க கொடுக்கலையே… தலைவர் இல்லாமல் இன்னைக்கு நான் உங்களைப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கே. தலைவர் நம்ம கூட இல்லையேனு யாரும் நினைக்காதீங்க.தலைவர் அங்கே (வானத்தை பார்த்து) நம்ம கூட தெய்வமா இருக்கிறார்.தலைவர் நம்ம கூடத்தான் இருக்கார்.எங்கேயும் போகலை. உங்க எல்லாருக்கும் தலைவர் சார்பாக நன்றியை தெரிவிக்கிறேன்”.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த கண்ணீரும் கம்பலையுமான பேச்சால் தே.மு.தி.கவினர் உருக்கமாகிப் போனார்கள்.