மன்னிப்பு கேட்க சொல்கிறார் அண்ணாமலை
தனியார் பத்திரிகை நிருபர் ஒருவர், பா.ஜ.க தொண்டரை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘அந்நிருபர் தொண்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் அண்ணாமலை நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டபோது, தனியார் பத்திரிகை நிருபர் ஒருவர் பா.ஜ.க தொண்டர் ஒருவரை கெட்ட வார்த்தையால் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த அண்ணாமலை நிருபர்கள் சந்திப்பை புறக்கணித்தார்.மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தாயை இழிவுபடுத்தும் வகையிலான அந்த கெட்ட வார்த்தையை கூறியதற்காக குறிப்பிட்ட நபர் எங்கள் தொண்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட மன்னிப்பு கேட்கவில்லை எனில், பல்லடம் பொலிசில் நானே புகார் அளிப்பேன். மன்னிப்பு கேட்கும் வரை நிருபர்களிடம் பேட்டி அளிக்க மாட்டேன்” எனக் கூறி புறக்கணித்துச் சென்றார்.