Thursday, May 16, 2024
Home » கைதடி மத்தி உதயசூரியன் சனசமூக நிலையத்தின் 45ஆவது ஆண்டு விழா

கைதடி மத்தி உதயசூரியன் சனசமூக நிலையத்தின் 45ஆவது ஆண்டு விழா

by sachintha
April 9, 2024 10:52 am 0 comment

தென்மராட்சி – கைதடி மத்தி உதயசூரியன் சனசமூக நிலையத்தின் 45ஆவது ஆண்டு விழா அண்மையில் உதயசூரியன் சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் வெளிநாட்டு ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

சனசமூக நிலையத் தலைவர் வே.குகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் எஸ்.உதயசீலன் கலந்து சிறப்பித்திருந்தார். ​மேலும் சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் சி.

மதியழகனும், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் தங்கவேலு ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன்போது கலை நிகழ்வுகள், வட மாகாண ரீதியான நடனப்போட்டி, பரிசளிப்பு வைபவம்,கௌரவிப்பு நிகழ்வு என்பன நடைபெற்றன. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக பாடகி கில்மிசா கலந்து சிறப்பித்தார்.

(சாவகச்சேரி விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT