அலிசப்ரி ரஹீம் எம்.பியினால் நியமன பத்திரங்கள் கையளிப்பு
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் விசேட இடைக்கால நம்பிக்கையாளர் நியமன பத்திரங்கள் வெள்ளிக்கிழமை (05) வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நியமன பத்திரங்கள் 2024 ஏப்ரல் 01ஆம் திகதி தொடக்கம் 2024 ஜூன் 15ஆம் திகதி வரை (இரண்டரை மாத காலத்திற்கு) வழங்கப்பட்டுள்ளது.
பின்வருவோர் புதிய இடைக்கால விசேட நம்பிக்கையாளர்களாக நியமனம் பெற்றனர்.
தொழிலதிபர் எம்.டீ.ரூஹுல் ஹக், சட்டத்தரணி எம்.ஏ.எம்.அஸீம், அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி), ஆசிரிய ஆலோசகர் ஏ.டீ.எம்.நிஜாம்,
அஷ்ஷெய்க் எம்.எம்.முஹ்சின், கிராம சேவையாளர்களான என்.எம்.ரஸ்மி, எம்.எப்.எம்.முஜாகித், எச்.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் புத்தளம் வர்த்தக சங்க தலைவர் வை.எம்.நிஸ்தார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனம் வழங்கப்பட்டமைக்கான பிரதியை பெரிய பள்ளியின் முன்னாள் நம்பிக்கையாளர் பஸால் ஹாஜியார் ஒப்பமிட்டு பெற்றுக் கொண்டார்.
பெரிய பள்ளியின் பழைய நம்பிக்கையாளர் சபையினால் வேண்டிக் கொண்டதற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி புதிய நம்பிக்கையாளர் சபை ஒன்றை உருவாக்கும் வரையில் விசேட இடைக்கால நிர்வாகம் ஒன்றை நிறுவி அதற்கான நியமன பத்திரங்களையும் கையளித்தார்.
புத்தளம் தினகரன் நிருபர்