Sunday, May 19, 2024
Home » மைத்திரி கட்சியையும் நாட்டையும் அழித்து விட்டார்

மைத்திரி கட்சியையும் நாட்டையும் அழித்து விட்டார்

by sachintha
April 9, 2024 7:05 am 0 comment

சரிசெய்வோம் என சந்திரிகா ஆதங்கம் வெளியீடு

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியையும் அழித்து நாட்டையும் அளித்துள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவரால் இழைக்கப்பட்ட தவறுகளையே தற்போது நாம் நிவர்த்தி செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளக ரீதியில் பல்வேறு நெருக்கடிகள் நிலவும் நிலையில் நேற்று அந்தக் கட்சியின் செயற்குழு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கூடியது.

அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார்நாயக்க குமாரதுங்க வருகை தந்ததுடன் அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:

2015 ஆம் ஆண்டில் என்னை ஜனாதிபதி தேர்தலில் நிற்கச் சொன்ன போது நான் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த நடவடிக்கை எடுத்தேன். அவர் பதவியை வைத்துக்கொண்டு

கட்சியை மட்டுமன்றி நாட்டையும் அழித்துவிட்டார்.

கேள்வி: வீழ்ச்சியடைந்த கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப முடியுமா?

பதில்; நிச்சயமாக பலமானதாக கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி: அவ்வாறு நீங்கள் செயற்பட அவர் அனுமதிப்பாரா? கட்சியின் யாப்பு பலமானதா?

பதில்: கட்சியின் யாப்பை அவர் மாற்றி யுள்ளார். அதை வைத்து தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளார். எனினும் அதனை தாம் மாற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மனநிலை பாதிப்பு என்று நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT