Home » மற்றுமொரு வேலைத் திட்டம் ஆரம்பம்
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை;

மற்றுமொரு வேலைத் திட்டம் ஆரம்பம்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்

by damith
April 8, 2024 8:50 am 0 comment

கையடக்கத் தொலைபேசி மூலம் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் முறைமையை உபயோகித்து மேற்கொள்ளப்படும் சட்ட விரோத போதைப் பொருள் விற்பனை செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலை த்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுவை இல்லாதொழித்தல் வேலைத் திட்டத்திற்கு சமமாக இந்த வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம் ஆறாம் திகதி முதல் எதிர்வரும் பத்தாம் திகதி வரை இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மேற்படி கையடக்கத் தொலைபேசி மூலம் நிதியை பரிமாற்றம் செய்யும் முறைமையில் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 198 பேரின் தகவல்கள் ஒரே நாளில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT