ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியாக கருதப்படும் தாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக பளு தூக்கும் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஹன்சானி கோமஸ் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 49 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ஹன்சானி கோமஸ், ஸ்னாட்ச் முறையில் 76 கிலோ எடையை தூக்கி இச்சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
இதேவேளை, 55 கிலோ எடைப் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய திலங்க இசுரு குமார 05ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் ஸ்னாட்ச் முறையில் 112 கிலோ எடையையும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 145 கிலோ எடையையும் தூக்கியதுடன், இதன் அடிப்படையில் திலங்க தூக்கிய மொத்த எடை 247 கிலோவாகும். இது அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.