Friday, May 31, 2024
Home » அம்பாறையில் களைகட்டி வரும் புடைவை வியாபாரம்

அம்பாறையில் களைகட்டி வரும் புடைவை வியாபாரம்

by mahesh
April 3, 2024 12:10 pm 0 comment

ரமழான் பண்டிகை மற்றும் சித்திரை புத்தாண்டு இம்முறை அடுத்தடுத்து வருவதால் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை பிரதேசங்களிலுள்ள புடைவைக் கடைகளில் வியாபாரம் அமோகமாக களை கட்டத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பலரும் கடைகளுக்கு திரண்டு சென்று புடைவைகளை கொள்வனவு செய்கின்றனர்.

மண்டூர் மத்திய முகாம், சவளக்கடை, நாவிதன்வெளி உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து புடைவைக் கடைகளுக்கு மக்கள் செல்கின்றனர்.

தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலையை பொருட்படுத்தாமலும் மக்கள் புடைவைக் கொள்வனவில் ஈடுபடுவதாக, எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் மேற்படி பிரதேசங்களிலுள்ள கடைகளும் வியாபாரத்துக்காக பின்னிரவுவரை திறந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT