Monday, May 20, 2024
Home » வறிய குடும்பங்களுக்கு ரமழான் நிவாரண உதவி
மட்டக்களப்பில்

வறிய குடும்பங்களுக்கு ரமழான் நிவாரண உதவி

by sachintha
April 2, 2024 9:54 am 0 comment

புனித ரமழான் காலத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு நிறுவனங்கள் தற்பொழுது ரமழான் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது . இதனடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர வலய அமைப்பாளர் அலுவலகம் மட்டக்களப்பு நகர ஜாமியுஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ரமழான் நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு நகர ஜாமியுஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர வலய அமைப்பாளர் பீ.ரீ.அப்துல்லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகசபை பிரதிநிதியும் பிரதம கணக்காளருமான எம்.ஏ. முகமது சுஹைர்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர். எம்.பஸீர், மற்றும் பல நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர பிரிவில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு ரமழான் நிவாரண உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

(மட்டக்களப்பு சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT