128
பேருவளை சீனன்கோட்டை ‘முத்துக்கள் வாட்ஸ்அப்’ குழுமத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு பெருகமலை வரவேற்பு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. குழுமத்தின் தலைவர் எம்.ராமிஸ் நாஸிம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மௌலவி முஹம்மத் அஸ்லம் (முஅய்யதி) பலஸ்தீனத்தில் நிரந்தர சமாதானம், அமைதிக்காக வேண்டி விசேட துஆப் பிரார்த்தனையும் புரிந்தார். குழுமத்தின் அங்கத்தவர்கள் பிரமுகர்கள் நிகழ்வில் பங்குபற்றினர். முதல் தடவையாக இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.