பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியால் மற்றுமொரு இடைநிறுத்தப்பட்ட பாலத்தின் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
சிலாபம் ஜெயபிம பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட பாலத்தின் வேலைகள் நாட்டில் ஏற்பட்ட கொரோனா முடக்கம் மற்றும் பொருளாதார முடக்கம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் மக்கள் பெரிதும் இன்னல்களை அனுபவித்துவந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கொண்டு சென்றதையடுத்து அந்த வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜெயபிம பாலத்தை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அதிகாரிகள் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டார்.
புத்தளம் தினகரன் நிருபர்