சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் மற்றும் சகலதுறை வீரர் இமாத் வசீம் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 29 பேர் கொண்ட பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்தப் பயிற்சிக் குழாம் நாட்டின் இராணுவ முகாம் ஒன்றில் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
ஆமிர் 2020 இல் தனது 28 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததோடு அப்போதைய முகாமைத்துவத்தின் கீழ் தம்மால் தொடர்ந்து ஆட முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பாக். கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஆமிர் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
முன்னதாக நான்கு மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 35 வயதான இமாத் வசீம் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.