Monday, May 20, 2024
Home » கிளிநொச்சி, வவுனியாவில் பொலிஸ் வீரர்கள் தினம்

கிளிநொச்சி, வவுனியாவில் பொலிஸ் வீரர்கள் தினம்

by Gayan Abeykoon
March 22, 2024 8:46 am 0 comment

இலங்கை பொலிஸ் வீரர்கள் தினமான 160ஆவது ஆண்டை நினைவுகூரும் பொலிஸ் வீரர்கள் ஞாபகார்த்த தினம் நேற்று வியாழக்கிழமை (21) கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டன.

தமது உயிரை நீத்த பொலிஸ் வீரர்களை நினைவுகூர்ந்து இத்தினம் நாடளாவிய ரீதியில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதுடன், நாட்டின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் அங்குள்ள அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை வவுனியா – கண்டி வீதியை அண்டி அமைந்துள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலக வளாகத்திலுள்ள பொலிஸ் நினைவுத் தூபிக்கு முன்பாக நிகழ்வு நடைபெற்றது.

பரந்தன் குறூப், வவுனியா விசேட நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT