175
தாய்லாந்து சொகுசு கப்பல் நேற்று 1100 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பல நாடுகளையும் சேர்ந்த பயணிகள் இக்கப்பலில் வருகை தந்திருந்தனர். நாட்டின் முக்கிய பல பகுதிகளுக்குச் சென்ற இவர்கள் பின்னர் நேற்று மாலையே இக்கப்பலில் மாலைதீவு நோக்கிப் புறப்பட்டனர். இக் கப்பலில் அவுஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பலர் வந்திருந்தனர்.