அஃலன் வஸஹ்லன் யா ரமலான்,
அஃலன் வஸஹ்லன் யா ரமழான்!
மாண்புறும் ரமழானே, மாண்புறும் ரமழானே
வாஞ்சை மிகும் ரமழானே, தருக அருள் தருக!
வஞ்சகர் செய்த _படுபாவக் கறையினை சுட்டெரிக்க
_ வந்த சுடர்மிகும் ரமழானே!
உன் வரவால் உலகமே _ சுடர் விடுகிறதே ஓ ரமழானே!
முதல் பத்தில் றஃமத்தையும்
அடுத்த பத்தில் மஃபிறத்தையும்
கடைசிப் பத்தில் நரக விடுதலையையும் _தந்த
புனிதமிகு ரமழானே, அருள் தருக!
நானிலம் சிறக்க, நபி வழி நடக்க,
நாயக அருள் கிடைக்க _ வந்த நல்ரமழானே
தருக அருள் தருக!
நல்வழி நாம் நடந்து நானிலம் போற்றிடவே
நலமாக நாம் வாழ _ வந்த நல்ரமழானே _
நீ அருள் தருக!
பாவக்கறை சூழ
பாவிகள் வாழும் _ காலமிதே
பாவக்கறை போக்க
பகிர்ந்தளிக்கும் நல் _ மாதமிதே
ரமழானே தருக, அருள் தருக!
ஏழை எளியோர் துயர் துடைக்கவே
கணக்கிட்டு ஸகாத் வழங்க வந்துதித்த_ மாதமிதே
ரமழானே தருக அருள் தருக!
ஆயிரம் மாதங்களை _விட சிறந்த நல் மாதமிதே
ஒற்றைப்பட்ட நாட்களிலே
ஒழிந்த லைலதுல் கதிர் இரவை தேடுகின்ற _
நல் மாதமிதே ரமழானே தருக, அருள் தருக!
வானவராம் ஜிபிரீல் வான்மறை வழங்கிய
இறைவேதம் ஓதுகின்ற _இனிய நல்ரமழானே
தருக, அருள் தருக!
சாமஸ்ரீ தேசமான்ய எம்.ஏ.ஏம்.ஹஸனார்…
ஜே.பி