113
கைத்தொழில் அமைச்சின் ஆலோசனைக்கமைய சர்வதேச கைத்தொழில் கண்காட்சி எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு கைத்தொழில்களின் சமீபகாலபோக்கு, நவீன தொழில்நுட்பம், கைத்தொழிலில் ஈடுபடுகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோர்களை ஒன்றிணைத்தல் ஆகியவற்றுக்கு இக்கண்காட்சி பாலமாக அமையவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்திச் சபை தெரிவித்தது.