உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மர்மங்களில் ஒன்றாக மாறியுள்ளது மலேஷிய ஏர்லைன் MH 370 விமானம் காணாமல்போய் நேற்றுடன் (08) 10 ஆண்டுகள் நிறைவடைந்தன.
2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து பீஜிங் நகரை நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் நடுவானில் ராடர் திரையில் இருந்து மறைந்தது.
தென் இந்திய பெருங்கடலின் 46,332 சதுர மைல் பகுதியை உள்ளடக்கிய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய தேடுதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டபோதும் அந்த விமானத்தின் சில துண்டுகளை மாத்திரமே கண்டுபிடிக்க முடிந்தது.
தேடுதல் நடவடிக்கை 2017 ஜனவரி மாதம் இடைநிறுத்தப்பட்டது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு என்ன ஆனது என்ற கேள்விக்கு இன்னும் பதில் தேடி வருகின்றனர்.