கடற்றொழில் நடவடிக்கைக்காக 03 பேருடன் கற்பிட்டியிலிருந்து புறப்பட்ட படகொன்று காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஈச்சங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூவர் கடற்றொழில் நடவடிக்கைக்காக இந்தப் படகில் புறப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அப்படகின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதுடன், கடற்றொழில் நடவடிக்கைக்காக இம்மூவருடன் புறப்பட்ட படகு மீண்டும் கரை திரும்பவில்லையெனவும் தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடற்படையினருக்கு தாம் தகவல் வழங்கிய நிலையில் அவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.