Monday, May 20, 2024
Home » புர்கினா கிராமங்கள் மீது தாக்குதல்: 170 பேர் பலி

புர்கினா கிராமங்கள் மீது தாக்குதல்: 170 பேர் பலி

by manjula
March 5, 2024 10:38 am 0 comment

புர்கினா பாசோவின் மூன்று கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட சுமார் 170 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொம்சில்கா, நோர்டின் மற்றும் சோரோ ஆகிய கிராமங்கள் மீது தாக்குதல்களை நடத்தியவர்களை கண்டறிய உதவும்படி சம்பவத்தை பார்த்தவர்களுக்கு அரச வழக்கறிஞர் அலி பெஞ்சமின் அழைப்பு விடுத்துள்ளார்.

மறுபுறம் நகர மையங்கள் உட்பட இஸ்லாமியவாத ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இராணுவம் எச்சரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியபோதும் புர்கினாவின் மூன்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி யடென்கா மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருப்பதாக பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்தாரிகள் மேலும் பலருக்கு காயத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக அரச வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT