Saturday, May 18, 2024
Home » மண்முனை தென் எருவில் பற்று இளைஞர் கழக நிர்வாகிகள் தெரிவு

மண்முனை தென் எருவில் பற்று இளைஞர் கழக நிர்வாகிகள் தெரிவு

by damith
February 26, 2024 5:55 am 0 comment

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகப் புனரமைப்பு பொதுக் கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் த.சபியதாஸின் ஒழுங்கமைப்பில் சம்மேளன தலைவர் தி.ஜெகநாதனின் தலைமையில் (23) இடம்பெற்றது.இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நா.குகேந்திரா, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி. நிஷாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் யுவப்பிரகாஷ், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கு.துஷாந்தன் மற்றும் பிரதேச இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT