137
தம்பலகாமம் பிரதேச செயலக 2023ஆம் ஆண்டின் 4ம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வெளிக்கள உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடாத்தினார்.
உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிர்வாக உத்தியோகத்தர் உடகெதர,கிளைத்தலைவர்கள்,வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
(தம்பலகாமம் குறூப் நிருபர்)