தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலம் காணி உரிமம் மற்றும் வீடமைப்பு கடன் திட்ட காசோலை வழங்கும் அநுராதபுரம் மாவட்டத்திற்கான நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தலைமையில் வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் ரஜிவ் சூர்ய ஆராச்சியின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. மிக நீண்ட காலமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி சபையினால் வழங்கிய வீடுகளில் வசித்து வந்த போதும் பல்வேறு சட்ட திட்டங்களினால் காணி உரிமம் வழங்குவதற்கு முடியாமல் போய் இருந்தன. பின்னர் குடும்பங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக. 2015 தொடக்கம் 2019 காலகட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்பு செயற்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத 429 வீட்டு பயனாளிகள் 250 பேருக்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது வீடமைப்பு அதிகார சபை உப தலைவர், அநுராதபுரம் மாவட்ட மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்