Home » வீடமைப்பு அதிகார சபையினால் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு

வீடமைப்பு அதிகார சபையினால் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு

by Gayan Abeykoon
February 15, 2024 9:14 am 0 comment

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலம் காணி உரிமம்  மற்றும் வீடமைப்பு கடன் திட்ட காசோலை வழங்கும்  அநுராதபுரம் மாவட்டத்திற்கான நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்  தலைமையில் வீடமைப்பு  அதிகார சபைத் தலைவர் ரஜிவ்  சூர்ய ஆராச்சியின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. மிக நீண்ட காலமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி சபையினால் வழங்கிய வீடுகளில் வசித்து வந்த போதும் பல்வேறு சட்ட திட்டங்களினால் காணி உரிமம் வழங்குவதற்கு முடியாமல் போய் இருந்தன. பின்னர் குடும்பங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக. 2015 தொடக்கம் 2019  காலகட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்பு செயற்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு  செய்யப்படாத 429 வீட்டு  பயனாளிகள்  250 பேருக்கு காசோலை  வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது வீடமைப்பு அதிகார சபை உப தலைவர்,  அநுராதபுரம் மாவட்ட மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT