புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் கருத்திட்ட செயற்பாடுகளில் ஒன்றான புத்தளம் மாவட்ட மட்டத்தில் மக்கள் சபைகள் நிறுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் (11) புத்தளம் பெரியபள்ளிவாசலில் இடம்பெற்றது. புத்தளம் பெரியபள்ளிவாசல் தலைமையுடன் புத்தளம் பிரதேச செயலக எல்லைக்குள் உள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் பீ.சீ.எம்.எச். நிறுவனத்தினூடாக சமய வழிபாட்டுத்தளங்களை அடிப்டையாகக் கொண்டு பாதுகாப்பு குழு, கல்வி மேம்பாட்டுக் குழு மற்றும் அபிவிருத்திக் குழு ஆகியன அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், ஆற்றப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விளக்கமளித்தார்.
நிகழ்வில் பங்குபற்றியவர்களிடமிருந்து எழுந்த கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதிலளித்தார்.
(புத்தளம் தினகரன் நிருபர்)