இலங்கை கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 1,472 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.இதன்போது,முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் (13) மதியம் மன்னார் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
வடமேற்கு கடற்படை கட்டளையினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், மன்னார் உப்புக்குளம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நடவடிக்கையில் 20 கேப்சூல்கள் வைத்திருந்த ஒருவர் கைதானார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது ஒரு வீட்டில் இருந்து 432கேப்ஸ்யூல்கள் கைப்பற்றப்பட்டன.இதிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
(மன்னார் குறூப் நிருபர்)