Sunday, May 19, 2024
Home » போதை மாத்திரை பாவனை நாட்டில் வெகுவாக அதிகரிப்பு

போதை மாத்திரை பாவனை நாட்டில் வெகுவாக அதிகரிப்பு

by Gayan Abeykoon
February 15, 2024 1:00 am 0 comment

 நச்சுத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளை பயன்படுத்தும்  நிலை நாட்டில் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அண்மைய நாட்களில் 3,63,438 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். அதேவேளை,யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT