Monday, May 20, 2024
Home » சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு: 08 நாட்களில் 60122 பேர்

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு: 08 நாட்களில் 60122 பேர்

by damith
February 13, 2024 6:15 am 0 comment

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இம்மாதத்தின் கடந்த எட்டு நாட்களில் மாத்திரம் 60,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 8,755 சுற்றுலாப்பயணிகளும், இந்தியாவிலிருந்து 8,369 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 4,423 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா சபையின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT