Saturday, May 4, 2024
Home » தேசிய சூறா சபை ஏற்பாட்டில் கொழும்பில் விசேட நிகழ்வு

தேசிய சூறா சபை ஏற்பாட்டில் கொழும்பில் விசேட நிகழ்வு

by sachintha
February 9, 2024 1:38 am 0 comment

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூறா சபை கொழும்பு 07இல் உள்ள ஜெயவர்த்தன மண்டபத்தில் ‘இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் விசேட நிகழ்வு சூறா சபையின் தலைவர் ரி.கே. அசூர் தலைமையில் (07) இடம் பெற்றது.

விசேட பேச்சாளர்களாக வல்பொல ராகுல நிறுவனத்தின் பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர், முன்னாள் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் சுஹைர், பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் ஆகியோர் உரையாற்றியதுடன் நன்றி உரையை சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் வழங்கினார். இதன்போது சூறா சபையின் அங்கத்தவர்கள், சமயத் தலைவர்கள், கொழும்பு பல்கலைக்கழக சட்டக்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

கொழும்பு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT