295
மலையக ரயில் பாதையில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு சென்ற உட ரட்ட மெனிக்கே ரயில் இன்று (07) காலை 5.45 மணிக்கு நாவலப்பிட்டிக்கும் ,உலப்பனைக்கும் இடையில் தடம்புரண்டுள்ளது.
இதனால் மலையக மார்க்க ரயில் சேவைகளில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.
அடிக்கடி மலையக மார்க்கத்தில் ரயில்கள் தடம்புரள்வது தற்போது வழமையாகி வருவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு – பதுளை மார்க்க ரயில் பாதைகளை செப்பனிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா தினகரன் நிருபர்