தற்போதைய நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட தகைமையானவர் உள்ளனரா?அவ்வாறிருந்தால் பொதுஜன பெரமுனவில் அவருக்கு சந்தர்ப்பம் வழங்குவது சிறந்ததென ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.தகைமையானவர் அந்தக்கட்சியில் இல்லையென்றால் கண்டிப்பாக அச் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவது அவசியமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையில் கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்தித்து சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய தூர நோக்குள்ள தலைவர் ஒருவரே நியமிக்கப்படவேண்டும். அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி அதற்கு சிறந்த தகைமை உள்ளவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)