195
யாழ்ப்பாணத்தின் மல்லாகம் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற பெரியதம்பிரான் கோயிலில் சங்காபிஷேகம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பெரியதம்பிரான் பெருமானுக்கு விசேட பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தவில், நாதஸ்வரம் முழங்க பிரதான கும்பங்கள் உள்வீதியால் வலமாக கொண்டு வரப்பட்டு, பெரியதம்பிரான் பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.
இச்சங்காபிஷேகத்தில் பெருமளவான அடியவர்கள் கலந்துகொண்டு, பெரியதம்பிரானின் அருள் பெற்றுக்கொண்டனர்.
கோப்பாய் குறூப் நிருபர்