மஹியங்கணை, பங்கரகம்மன கிராமத்தில் இயங்கும் அல் ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவில் அல்குர்ஆனை ஓதி கொடுப்பது மாத்திரம் இன்றி தஜ்வீத் முறைப் பிரகாரம் குர்ஆனை ஓதுவதற்கும் மனனமிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மதர்ஸாவில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் அல்குர்ஆனை சிறந்த முறையில் ஓதி மார்க்க விடயங்களைக் கற்று திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு மத்ரஸா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் கொழும்பு அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷைக் எம் எச் ஷேஹுத்தீன் மதனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுவதையும் பரிசில்கள் பெற்றுக்கொண்ட மாணவ மாணவியரையும் படங்களில் காணலாம்.