Wednesday, May 15, 2024
Home » ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் ஆசி பெற்ற கிழக்கு ஆளுநர் செந்தில்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் ஆசி பெற்ற கிழக்கு ஆளுநர் செந்தில்

by Gayan Abeykoon
January 24, 2024 7:33 am 0 comment

இந்தியாவின் ஆன்மிக தலைவரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் அண்மையில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

இதன்போது இலங்கைக்கு வருமாறும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜிக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார். இதேவேளை, வாழ்க்கையின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை போதிக்கும் புத்தகங்களை ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி பரிசாக வழங்கினார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி பாராட்டுத் தெரிவித்தார்.

ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் மூலம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பாக அவர்கள் இருவரும் கலந்துரையாடினர்.

ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பு ஓர் உலகளாவிய அமைப்பாகும். உலகளாவிய மக்கள் தமது வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல் போன்ற சேவைகளை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT