Friday, May 3, 2024
Home » அச்சுவேலி வைத்தியசாலையில் பராமரிப்பு நிலையம் திறப்பு

அச்சுவேலி வைத்தியசாலையில் பராமரிப்பு நிலையம் திறப்பு

by Gayan Abeykoon
January 18, 2024 5:23 am 0 comment

யாழ்ப்பாணம், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான  பராமரிப்பு மற்றும் சிகிச்சை நிலையமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (16)  திறந்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக கர்ப்பிணிகளுக்கும் சிறுவர்களுக்கும் சிகிச்சை வழங்குவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்த அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு பத்தமேனியைச் சேர்ந்த ஆறுமுகம் சிவானந்தனின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் முழுமையான நிதி உதவியில் 17 இலட்சம் ரூபா பெறுமதியில் இதற்கான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை நலன்புரிச் சங்க செயலாளர் ச.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்த நிலையத்தை   ஆறுமுகம் சிவானந்தன் குடும்பத்தினர் மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளரும் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிலையமானது சிறுவர்கள் மற்றும் சிறுவர்களை பராமரிப்பதற்கு  ஏதுவாக சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

(யாழ். விசேட நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT