சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட கிராம மக்கள் திண்டாட்டம்!
அடைமழையினாலும், இங்கினியாகல டீ.எஸ்.சேனநாயக சமுத்திர வான்கதவு திறப்பினாலும் சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற திட்ட கிராம மக்கள் சிறு குழந்தைகளோடும், வயோதிபர்களோடும், வலது குறைந்தோருடனும் அவதியுறுகின்றனர்.
கிராமத்தின் பின்புறமாகவும், கரைவாகு ஆற்றினால் முன்புறமாகவும் பரவும் வெள்ளநீர் முழுக்கிராமத்ததையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
கிராமத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல முடியாத நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள இம்மக்கள், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்தினால் உயிர்கள், உைடமைகள் ,குடியிருப்பு மற்றும் தொழில்களை இழந்து வெறும் கையோடு இக்குடியேற்றக் கிராமத்தில் குடியேறிய மக்களாவர்.
மீன்பிடி, விவசாயம் என்பவற்றோடு நாளாந்தம் கூலித்தொழில் செய்து தமது குடும்ப வருமானத்தை பெற்றுக் கொள்ளும் இம்மக்கள் இவ்வெள்ள நிைலமையில் தொழிலின்றி இக்கட்டான நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)